
ப்ளூ ஸ்டார் படத்தினை பார்த்த நடிகர் பாண்டியராஜனின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரித்வி.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் டெண்ட்கொட்டாவிலும் (வெளிநாடுகளுக்கு) அமேசான் பிரைமிலும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரித்வி, அவரது தந்தை பாண்டியராஜன் ப்ளூ ஸ்டார் படத்தினை ஓடிடியில் பார்க்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில், “இது உங்களுக்காக அப்பா. ப்ளூ ஸ்டார் படத்தில் என்னைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் வரும் மகிழ்ழ்சி எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உங்களை காதலிக்கிறேன். ப்ளூ ஸ்டார் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
This one's for you, Dad. Seeing the joy on your face as you watch me in "Blue Star" is the greatest reward.
— Prithvi (@prithviactor) March 2, 2024
Love you more than words can say. â¤ï¸
Blue Star now streaming on Amazon Prime - @primevideoin#Grateful #AmazonPrime #BlueStar #Prithvi pic.twitter.com/HxIKAk4XIm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







