இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

‘வெந்து தணிந்தது காடு-2’ படத்தின் அப்டேட்!

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.

News image
Updated On :2 மார்ச் 2024, 3:59 pm IST

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ ரூ.85 கோடி வசூலித்தது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கௌதம் மேனன், “விடிகே-2 படத்துக்கான கதை தயாராக இருக்கிறது. முதலில் சிம்பு இதில் வரவேண்டும். நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் வேல்ஸ் மீண்டும் இணையும்போது நிச்சயமாக அது நடக்கும். சிம்பு பெரிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிந்தப்பிறகு நடக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமைப்போல் காக்கா படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.