நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.
கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படமும் வெற்றியடைந்ததால் அசோக் செல்வன் நிதானமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் மீண்டும் நடிக்க அசோக் செல்வன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.