மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

அருவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.

News image
Updated On :8 மே 2024, 10:32 am

DIN

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மக்களிடம் அதிகம் வரவேற்கப்பட்ட தொடர்களாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் உள்ளன. அதேபோல், இத்தொடர்கள்தான் டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

சமீபத்தில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா, பிரியமான தோழி உள்ளிட்ட தொடர்கள் நிறைவடைந்த நிலையில், அருவி தொடரும் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.

அருவி தொடர் கன்னட தொடரான கஸ்தூரி நிவேசா தொடரின் கதையை மையமாகக் கொண்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்ட தொடராகும். இத்தொடரில் நடிகை ஜோவிதா பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் நடிகை அம்பிகா, கார்த்திக் வாசு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இந்த தொடரில் நடிக்கின்றனர். இத்தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அருவி தொடரின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் மே 11 ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

இந்த நிலையில், இதிகாசத் தொடரான இராமாயணம் தொடர் வரும் மே 13 முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அருவி தொடர் நிறைவடையவுள்ளதால், பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மலர் தொடர், நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அதேபோல், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் தொடர் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.