பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

நயன்தாரா திருமணப்படத்தில் நானும் ரௌடிதான் காட்சிகள்!

நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் காட்சிகள்...

News image
Updated On :18 நவம்பர் 2024, 12:22 pm IST

நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டதற்கு தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ரசிகர்களிடம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இதில், நானும் ரௌடிதான் படத்தின் 10 விநாடி நேரம் கொண்ட படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருந்த சூழலில், சம்பந்தப்பட்ட படத்தின் காட்சியை நெட்பிளிக்ஸ் பயன்படுத்தியுள்ளதால் தனுஷ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.