குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள்.. ரஹ்மானின் இசைக் குழு கலைஞரின் விவாகரத்துப் பதிவு

ரஹ்மான் விவாகரத்து தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் வெளியான மற்றொரு விவாகரத்து அறிவிப்பு வந்தது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 4:35 pm IST

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் இடம்பெற்றுள்ள இசைக் கலைஞர் மோஹிணி தேய் தனது விவாகரத்து அறிவிப்பில், எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்த தகவலையே மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மற்றொரு விவாகரத்து அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில், இசைக் கருவியை இசைக்கும் பல்வேறு திறமை கொண்ட இசைக் கலைஞர் மொஹிணி தேய், தனது கணவரும் இசையமைப்பாளருமான மார்க் ஹர்ட்ச்சிடமிருந்து பிரிந்து வாழப்போவதாக, இன்ஸ்டாகிராமில் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவிப்பு வெளியான நிலையில், அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், மற்றொரு இசைக் கலைஞரின் விவாகரத்து அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தம்பதி நீண்ட ஒரு பதிவின் மூலம், தங்களது பிரிவுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், இருவரும் ஒருமித்த முடிவெடுத்து விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.

மிகக் கனத்த இதயத்துடன் நானும் எனது கணவர் மார்க்கும் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுகிறோம். எங்கள் இருவரின் முழு சம்மதத்துடன்தான் பிரிவது என்ற இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருப்போம், இருவருக்குமே தனித்தனி தேடல்கள் இருந்தது. அதனை அடைய இருவரும் பிரிந்து ஆக வேண்டும் என்பதை புரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தம்பதி பதிவிட்டுள்ளனர்.

நாங்கள் இருவரு பிரிவது என்று முடிவெடுத்தாலும், இது எங்கள் இசைப் பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இணைந்து பல வேலைகளை தொடர்ந்து செய்வோம், தங்களது ரசிகர்கள், இந்த முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு, எங்களது தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும், தன்னிச்சையாக எதையும் மதிப்பிட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மோஹிணி தேய்க்கு தற்போது 29 வயதாகிறது. இவர் இசையுலகில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு செய்திகளும் இருவேறு தகவல்களாக இருந்தாலும், ஒரே துறையிலிருந்து அடுத்தடுத்து விவாகரத்துச் செய்திகள் வரும் போது மக்கள் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.