
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில் இந்தியப் பின்னணியில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’.
இளம் வயதில் வறுமையால் பல இன்னல்களை அனுபவிக்கும் இளைஞன் கோடீஸ்வரனாகும் கதையாக உருவான இப்படத்தில் தேவ் படேல், ஃபிரீடா பின்டோ, அனில் கபூர், இர்பான் கான் பலர் நடித்திருந்தனர். உலகளவில் ரூ. 400 கோடி வரை வசூலித்து அசத்தியது.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த, ‘ஜெய் ஹோ’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்ததுடன் இந்தப் படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
தற்போது, பிரிட்ஜ் - 7 என்கிற நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.