பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சாய் பல்லவி தங்கைக்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள், விடியோக்கள்!

நடிகை சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நடிகை சாய் பல்லவி தங்கைக்கு திருமணம். - படங்கள்: எக்ஸ், இன்ஸ்டாகிராம் / சாய் பல்லவி பேன்ஸ்.

Published On :

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா  முழுவதும் கவனம் பெற்றார்.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்தாண்டு ஜனவரி 21இல் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகை சாய்பல்லவியின் புகைப்படங்கள் நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் அமரன் படத்திலும் தெலுங்கில் தண்டேல் படத்திலும் நடிக்கிறார்.

கார்கி, விராட பருவம் படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது குறித்து சாய் பல்லவி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள்.

சாய் பல்லவி ரன்பீர் கபீருடன் இணைந்து ராமாயணம் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள அமரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.