‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெயிலர் வில்லன் மீண்டும் கைது!

விமான நிலையத்தில் மது போதையில் சட்டையில்லாமல் கூச்சலிட்டதால் நடிகர் விநாயகன் கைது

News image

நடிகர் விநாயகன்

கோப்புப் படம்

Updated On :8 செப்டம்பர் 2024, 10:45 am

DIN

ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் சட்டையில்லாமல் கூச்சலிட்டதால் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டார்.

கொச்சியில் இருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கோவாவுக்கு செல்லவிருந்த மலையாள நடிகர் விநாயகன், சனிக்கிழமை மாலையில் விமான நிலையத்தில் சட்டை இல்லாமல், தரையில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி, கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, நடிகர் விநாயகன் மது அருந்தியிருப்பதை உறுதி செய்த மத்திய தொழில் பாதுகாப்புக் குழு, அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற சிக்கலில் சிக்குவது இது முதல் முறை அல்ல; விநாயகன் தனது குடியிருப்பில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, கைது செய்யப்பட்ட பின்னர், காவல் நிலையத்திலும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.