பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எனது வாழ்க்கையில் பல காதலர்கள் இருந்துள்ளார்கள்..! மனம் திறந்த ரெஜினா!

நடிகை ரெஜினா தான் பலரைக் காதலித்துள்ளதாக நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

நடிகை ரெஜினா

Published On :

சென்னையைச் சேர்ந்த ரெஜினா (33) தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் படங்களில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, அஜித்தின் விடா முயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.

விடா முயற்சி படத்தில்...

விடா முயற்சி படத்தில்...

செக்‌ஷன் 108, பிளாஸ்பேக் படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜாட் எனும் ஹிந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

உட்சவம் எனும் தெலுங்கு படம் நேற்று (செப்.13) வெளியாகியது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜுன் சாய் இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ்ராஜ், திலீப் பிரகாஷ் நடித்துள்ளார்கள்.

சந்தீப் கிஷன், சாய் தரம் தேஜ் உடன் காதலிப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், அவர்கள் நண்பர்கள் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ரெஜினா பேசியதாவது:

காதல் அனுபவம்

எனது வாழ்க்கையில் பல நபர்களுடன் காதலில் இருந்துள்ளேன். நான் ஒரு சீரியல் டேட்டர் (நீண்ட காலமாக உறவில் இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பவர்கள்). ஆனால், தற்போது அதிலிருந்து சற்று ஓய்வு பெற்றுள்ளேன்.

நான் மிகவும் நேர்மையானவர். எனக்கு பல முன்னாள் காதலர்கள் இருந்திருக்கிறார்கள். எனது பெற்றோர்கள் கேட்டபோதும் நான் இதைக் கூறியுள்ளேன். என்னால் பொய் சொல்லமுடியாது.

நடிகை ரெஜினா.

நடிகை ரெஜினா.

உறவில் இருப்பவர்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும். அன்பும் மரியாதையும் அதிகமாக எதிர்பார்ப்பேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்தக் குணம் இல்லாவிட்டால் என்னுடன் பழக முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.