சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

100 நாள்களைக் கொண்டாடிய சிங்கப் பெண்ணே தொடர்!

டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடர் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 7:12 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 100 நாள்களைக் கடந்துள்ளது. இதனைக்  சிங்கப் பெண்ணே குழுவினர் கொண்டாடியுள்ளனர். சின்னத்திரை ரசிகர்கள் பலர் சிங்கப் பெண்ணே குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித், தர்ஷக் கெளடா ஆகியோர் நடிக்கின்றனர். 

சிங்கப் பெண்ணே நடிகர், நடிகைகள்

சிங்கப் பெண்ணே நடிகர், நடிகைகள்

கிராமத்தில் வளர்ந்த இளம் பெண் குடும்ப வறுமை காரணமாக நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே கயல், எதிர்நீச்சல் போன்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது. 

அதனைத் தொடர்ந்து பல வாரங்களில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடர் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 

கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.