வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு! திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்

நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்!

அரசியல் கட்சித் துவங்கியதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினிகாந்த்துக்கு நன்றி கூறியுள்ளார் விஜய்.

Published On :9 பிப்ரவரி 2024, 7:13 pm IST

அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்கிற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக வெற்றி கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட் மற்றும் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார். 

விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் தலைவராக முதல் படம் என்பதால், இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக வைத்தே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதற்குப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த்தும் தன் வாழ்த்துகளைக் கூறியிருந்தார். இதற்காக, ரஜினியை செல்போனில் அழைத்த விஜய் அவரின் வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.