

இன்றிலிருந்து மோடியின் இந்தப் புகைப்படத்தை பாருங்கள் என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து ’எமர்ஜென்சி’ படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்தார் கங்கனா. பின்னர், ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்திருந்தார்.
சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளியான தேஜஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், கங்கனா ரணாவத் அவரது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மோடி ஜி நம்மில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவரை மிகவும் அசாதாரணமாக்குவது எது? என் கருத்துப்படி, அவரது நோக்கம், உணர்ச்சி மற்றும் செயலின் தீவிரம்.
இன்றிலிருந்து இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள், அவருடைய கண்களைப் பாருங்கள், இது வெறும் தோற்றம்தான் ஆனால் சுடர்விடும், வாளைவிடக் கூர்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது.
இதையும் படிக்க: விமான ஊழியரைக் கடித்த பயணி.. குடிபோதையால் நடந்த விபரீதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.