முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

’நானொரு பஷீரிஸ்ட்..’: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறியுள்ளார்.

News image
Updated On :21 ஜனவரி 2024, 4:09 pm IST

நடிகர் கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுத்தாளர்கள் பற்றியும் நல்ல புத்தகங்கள் பற்றியும் அடிக்கடி குறிப்பிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில ஆண்டுகளாக வாசிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.

இந்நிலையில், மறைந்த பிரபல மலையாள எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், ‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு.” எனக் கூறியுள்ளார். 

எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர்.

எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர்.

வைக்கம் முகமது பஷீர் எழுதியவைகளில் மதிலுகள், பால்யகால சகி, நீல வெளிச்சம், காதல் கடிதம் ஆகியவை புகழ்பெற்றவை.

மதில்கள் நாவலை இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக உருவாக்கினார். அப்படத்தின் நாயகனாக மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் சிறந்த இயக்கநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் என நான்கு தேசிய விருதுகளையும் ஒரு மாநில விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.