கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

‘கனிமா’ டிரெண்டிங்கில் இணைந்த சாய் தன்ஷிகா!

ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு சாய் தன்ஷிகா நடனமாடியுள்ளார்.

News image

கனிமா பாடலுக்கு நடனமாடிய சாய் தன்ஷிகா. - படங்கள்: இன்ஸ்டா / சாய் தன்ஷிகா.

Updated On :4 ஏப்ரல் 2025, 3:25 pm IST

ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு நடிகை சாய் தன்ஷிகா நடனமாடியுள்ளார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ என்ற பாடல் சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த டிரெண்டில் நடிகை சாய் தன்ஷிகாவும் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளா தன்ஷிகா, "உங்கள் அனைவருக்குமாக கனிமா” எனக் கூறியுள்ளார்.

பேராண்மை, பரதேசி, கபாலி படங்களில் பிரபலமான சாய் தன்ஷிகா கடைசியாக தமிழில் 2021இல் லாபம் என்ற படத்தில் நடித்தார்.

தற்போது, தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திவரும் சாய் தன்ஷிகா கனிமா பாடலுக்கு நடனமாடியது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளதால் ரெட்ரோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கனிமா பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.