சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?

நடிகர் ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் விலை குறித்து....

News image

கூலி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்.

Updated On :9 ஆகஸ்ட் 2025, 2:40 pm IST

நடிகர் ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் பணியாற்றியுள்ளார்.

பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிகமான வசூலீட்டும் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேரளத்தில் ஒரே நாளில் முன்பதிவு மூலம் ரூ.3.21 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பெங்களூரில் முதல்காட்சிக்கு சிங்கிள் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது. மல்டிபிளக்ஸில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

கூலி டிக்கெட்...

கூலி டிக்கெட்... - படம்: தினமணி.

நேற்றிரவு (ஆக.8) முதல் தமிழ்நாட்டிலும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. காலைக் காட்சிகளைத் தவிர்த்து மற்ற காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ரூ.190 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது.

தமிழகத்தில் காலைக் காட்சி 9 மணிக்கும் கர்நாடகத்தில் 6.30 மணிக்கும் என்பதால் இவ்வளவு விலை விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.