குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

தனுஷ் குறித்து மிருணாள் தாக்கூர் பேச்சு...

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 3:51 pm IST

நடிகர் தனுஷுடான காதல் வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தன் 54-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷும் நடிகை மிருணாள் தாக்கூரும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வந்தது.

இந்த வதந்திக்குக் காரணம், மிருணாள் நடித்த சன் ஆஃப் சர்தார் - 2 படத்தின் நிகழ்ச்சியில் அவருடன் தனுஷ் கலந்துகொண்டதுதான். இச்சம்பவத்தை வைத்தே இருவரும் உறவில் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், அண்மையில் நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்கூரிடம் தனுஷ் குறித்து கேட்டபோது, “நானும் தனுஷும் காதலிப்பதாகப் பரவும் செய்திகளைப் பார்க்கும்போது பயங்கர சிரிப்பாக இருக்கிறது. ஒரு நட்பின் அடிப்படையில், நடிகர் அஜய் தேவ்கன் அழைப்பில்தான் என் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறு எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor mrunal thakur spokes about the rumours of she and dhanush in relationship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.