ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

ரெட்ரோ குறித்து பூஜா ஹெக்டே...

Published On :

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் முன்னணி நடிகையான இவர் தமிழில் பீஸ்ட், ரெட்ரோ திரைப்படங்களில் நடித்தார்.

ரெட்ரோ திரைப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பூஜா ஹெக்டே, “பாலிவுட்டில் ஒரே மாதிரியாக கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்கவே அழைக்கின்றனர். நான் நடித்த தென்னிந்திய திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. முக்கியமாக, தமிழில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் எனக்கு முற்றிலும் வேறொரு தோற்றத்தை கார்த்திக் சுப்புராஜ் அளித்தார்.

Story image

நான் நடித்த ராதே ஷியாம் படத்தைப் பார்த்தவர், என்னால் ருக்மணி மாதிரியும் நடிக்க முடியும் என நம்பினார். அதுதான் நல்ல, திறமையான இயக்குநருக்கான அடையாளம். இதற்காக, நான் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor pooja hegde spokes about her rukmani character in karthik subbaraj's retro movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.