பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கூலி திரைப்படமல்ல... ராம் கோபால் வர்மா பதிவு வைரல்!

ரஜினி குறித்து ராம் கோபால் வர்மா....

News image
Updated On :13 ஆகஸ்ட் 2025, 12:36 pm IST

இயக்குநர் ராம் கோபால் வர்மா கூலி திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூலி ஒரு திரைப்படமல்ல... இது இயக்கம்” எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நேர்காணலில் பேசிய ராம் கோபால், “ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லையென்றால் ரஜினி இல்லை” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் நிகழ்வொன்றில் பேசும்போது, “புத்தகத்தைப் பற்றி பேச கமல்ஹாசன், சிவகுமார் போன்ற அறிவாளிகள் இருக்கும்போது ஸ்லோமோஷனில் நடந்துவரும் என்னை ஏன் அழைத்தார்கள்?” எனச் ‘செல்லமாக’ ராம் கோபாலை அடித்தார்.

தற்போது, ராம் கோபால் வர்மாவின் பதிவு ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

director ram gopal varma says, coolie is not a movie.. it is movement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.