கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஜினியின் கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் குறித்து...

Coolie Film set...

கூலி படத்தின் படப்பிடிப்பில்... - படம்: சன் பிக்சர்ஸ்

Published On :

நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலமாக, தமிழில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை கூலி படைத்துள்ளது.

இதற்கு முன்பாக விஜய்யின் கூலி திரைப்படம் ரூ.148 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினி, சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.

ரூ.1000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜின் மோசமான படமென சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் விடுமுறை நாள்கள் என்பதால் வரும் மூன்று நாள்களும் படம் வசூலில் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டரில், “தி ரெக்கார்ட் மேக்கர், தி ரெக்கார்ட் பிரேக்கர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

The official collection details of actor Rajinikanth's film Coolie have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.