நடிகர் மம்மூட்டி களம் காவல் திரைப்படத்திற்காக அளித்த நேர்காணல் பதில் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற கிரைம் திரில்லர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிச. 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இதற்கான புரமோஷன் நேர்காணல் ஒன்றை மம்மூட்டி கொடுத்திருக்கிறார்.
கேள்விகளைக் கேட்ட பெண் நெறியாளர் இறுதியாக, “நீங்கள் எவ்வளவோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டீர்கள். நடிக்கவும் போகிறீர்கள். நான் உங்களுக்காக கதை எழுதிக்கொண்டு வந்தால் அதனை ஏற்பீர்களா?” எனக் கேட்டார்.
அதற்கு மம்மூட்டி, “கதை உருவாகும்போதும் அதனை எழுதும்போதும் என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதக்கூடாது. அப்படி எழுதினால் அந்தக் கதாபாத்திரம் நானாகத்தான் இருப்பேன். கதாபாத்திரத்தை மட்டும் எழுதுங்கள்; அதனால்தான் இப்படியான கதைகளில் நான் இருந்திருக்கிறேன்” என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் நடிப்பு மீதான மம்மூட்டியின் தேடலைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பாலிவுட் பாட்ஷா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வைரலாகும் விஜய் மகன் புகைப்படம்!
சிக்ஸ்பேக் நல்லதல்ல: பரத்
பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா - புகைப்படங்கள்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

