பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாலய்யாவின் அகண்டா - 2 சிறப்பு காட்சிகள் ரத்து!

இந்தியாவில் நடிகர் பாலய்யாவின் “அகண்டா 2: தாண்டவம்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து...

Published On :

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பாலய்யா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான “அகண்டா 2: தாண்டவம்” திரைப்படம் நாளை (டிச.5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. இப்படத்துக்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் புதிய படம், 3-டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று (டிச. 4) திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறினால் இந்தியாவில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளில் அகண்டா 2: தாண்டவம் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டபடி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been reported that special screenings of actor Nandamuri Balakrishna's film 'Akanda 2: Thandavam' have been cancelled across the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.