சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

மறைந்தவர்களின் குறித்து ஜான்வி கபூர்

jhanvi kapoor

ஜான்வி கபூர்

Published On :4 டிசம்பர் 2025, 3:10 pm IST

நடிகை ஜான்வி கபூர் இறந்தவர்கள் குறித்து கேலி செய்யும் போக்கைக் கண்டித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். தெலுங்கில், தேவரா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அண்மையில் வெளியாகி மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற, ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜான்வி, “மறைந்த என் அம்மா ஸ்ரீதேவியைக் குறித்து பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேச வேண்டியுள்ளது. காரணம், நான் விளம்பரம் தேடுவதாக நினைப்பார்கள் என்கிற பயத்திலேயே பலமுறை தயங்கியிருக்கிறேன்.

மேலும், இறந்தவர்களை மீம்ஸாக மாற்றி கேலிகள் செய்வது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் தர்மேந்திரா இறந்தபோதுகூட மீம்ஸ்கள் பகிரப்பட்டன. இன்னொருவரின் மரணத்தை மீம்ஸாக மாற்றுவது பரிதாபமான சூழலையே காட்டுகிறது.” எனத் தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Summary

jhanvi kapoor spokes about memes on dead peoples

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.