தொலைக்காட்சித் தொடர் நடிகை ராஜேஸ்வரி சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் சென்னையில் வசித்துவந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மனம் உடைந்தவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை தொடரில் அருணிற்கு அம்மாவாகவும், பாக்கியலட்சுமி தொடரில் அவரின் தோழியாகவும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.