25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

படையப்பா மறுவெளியீட்டுக்கு அசத்தல் வரவேற்பு...

நடிகர் ரஜினிகாந்த்

Published On :14 டிசம்பர் 2025, 1:29 pm IST

நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலில் கலக்கி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் மறுவெளியீடானது.

ரஜினியின் 75-வது பிறந்த நாளில் மறுவெளியீடானதால் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.

முக்கியமாக, ரஜினி அறிமுகமாகும் காட்சியை விசிலடித்து உற்சாகம் பொங்க ரசிகர்கள் கண்டுகளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 6 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.

அந்த வகையில், நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. தற்போது, படையப்பாவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் கில்லியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Summary

padayappa rerelease get good response from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.