ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நடிகர் நாசருக்கு கலைஞர் விருது!

முத்தமிழ்ப் பேரவையின் விருது விழாவில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கெளரவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

News image

நடிகர் நாசருக்கு விருது வழங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் - படம் - DIPR

Updated On :15 டிசம்பர் 2025, 2:18 pm

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் விருது விழாவில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச., 15) கெளரவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

இதில், திரைப்படங்களில் நடித்து, கதாசிரியர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களை எட்டிய நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இதேபோன்று இசை, நடனம் என பல துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்.

இதன்படி, நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். மூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது.

நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது.

கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இயல் செல்வம் விருது அளிக்கப்பட்டது.

நடனக் கலைஞர் அனிதா நாட்டிய சேவையை பாராட்டி நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது.

டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வன் விருது வழங்கப்பட்டது.

மிருதங்க கலைஞர் தஞ்சை முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.