தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

கேரள திரைப்பட விழாவில் 15 சர்வதேச படங்கள் முடக்கம்! மத்திய அனுமதி மறுப்பு!

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 15 படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :16 டிசம்பர் 2025, 1:27 pm IST

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்களைத் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில், 30 ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. கடந்த டிச.12 முதல் வரும் டிச.19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 15 படங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விழாவுக்குத் தேர்வான 19 திரைப்படங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், ‘பீஃப்’, ‘ஈகல்ஸ் ஆஃப் ரிபப்ளிக்’, ‘ஹார்ட் ஆஃப் தி வுல்ஃப்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காஸா’ போன்ற 4 படங்கள் மட்டும் தற்போது திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை என திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதில், பெரும்பாலும் பாலஸ்தீன விவகாரம் குறித்த கதைகளத்துடன் உருவான படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குநர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் 100 ஆண்டுகள் பழமையான “பேட்டில்ஷிஃப் பொட்டெம்கின்” எனும் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that 15 films from various countries were denied permission to be screened at the Kerala International Film Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.