பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கேரள திரைப்பட விழாவில் 15 சர்வதேச படங்கள் முடக்கம்! மத்திய அனுமதி மறுப்பு!

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 15 படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :16 டிசம்பர் 2025, 1:32 pm IST

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்களைத் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில், 30 ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. கடந்த டிச.12 முதல் வரும் டிச.19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 15 படங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விழாவுக்குத் தேர்வான 19 திரைப்படங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், ‘பீஃப்’, ‘ஈகல்ஸ் ஆஃப் ரிபப்ளிக்’, ‘ஹார்ட் ஆஃப் தி வுல்ஃப்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காஸா’ போன்ற 4 படங்கள் மட்டும் தற்போது திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த நடவடிக்கைகளுக்கான காரணம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை என திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதில், பெரும்பாலும் பாலஸ்தீன விவகாரம் குறித்த கதைகளத்துடன் உருவான படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குநர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் 100 ஆண்டுகள் பழமையான “பேட்டில்ஷிஃப் பொட்டெம்கின்” எனும் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that 15 films from various countries were denied permission to be screened at the Kerala International Film Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.