

இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு திரைத்துறை குறித்து பேசியுள்ளார்.
தென்னிதியளவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் தமன். தற்போது, அதிக தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பில் வெளியான ஓஜி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அகண்டா - 2 படமும் வசூல் செய்து வருகிறது.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்து நல்ல பாடல்களைக் கொடுத்தார். தற்போது, விஜய் மகன் ஜேசன் இயக்கிவரும், ‘சிக்மா’ படத்திற்கும் இதயம் முரளி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமன், “இங்கு (தெலுங்கு) பிறமொழி இசையமைப்பாளர்கள் பலரும் பணத்திற்காக இசையமைக்க வருகிறார்கள். பல தயாரிப்பாளர்கள் அதற்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், தமிழில் அப்படியில்லை. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவ்வளவு எளிதாக பிறமொழி இசையமைப்பாளர்களைப் பயன்படுத்த மாட்டார்கள்.
அனிருத்துக்கு எளிதாக தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் அப்படி கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவிலிருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை. இது குறையாவகே தெரிகிறது” எனக் கூறினார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் அண்மை காலமாக நிறைய தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எம். எஸ். சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.