திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

தமிழ், தெலுங்கு சினிமா குறித்து தமன்...

தமன்

Published On :16 டிசம்பர் 2025, 1:54 pm IST

இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு திரைத்துறை குறித்து பேசியுள்ளார்.

தென்னிதியளவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் தமன். தற்போது, அதிக தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பில் வெளியான ஓஜி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அகண்டா - 2 படமும் வசூல் செய்து வருகிறது.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்து நல்ல பாடல்களைக் கொடுத்தார். தற்போது, விஜய் மகன் ஜேசன் இயக்கிவரும், ‘சிக்மா’ படத்திற்கும் இதயம் முரளி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமன், “இங்கு (தெலுங்கு) பிறமொழி இசையமைப்பாளர்கள் பலரும் பணத்திற்காக இசையமைக்க வருகிறார்கள். பல தயாரிப்பாளர்கள் அதற்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், தமிழில் அப்படியில்லை. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவ்வளவு எளிதாக பிறமொழி இசையமைப்பாளர்களைப் பயன்படுத்த மாட்டார்கள்.

அனிருத்துக்கு எளிதாக தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், எனக்கு தமிழ் சினிமாவில் அப்படி கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவிலிருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை. இது குறையாவகே தெரிகிறது” எனக் கூறினார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் அண்மை காலமாக நிறைய தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

musician thaman spokes about tamil and telugu movie industries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.