

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி.
மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 52 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூல் இயக்குநருடன் இணையும் ஷண்முக பாண்டியன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.