சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தை மறுதணிக்கைக்கு படக்குழு அனுப்பியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் மொழிக்கு எதிரான மொழித்திணிப்பைக் கேள்விகேட்கும் கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்காராவின் முந்தைய படங்கள் கொடுத்த நம்பிக்கையை இப்படம் கொடுத்திருப்பதால் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது சென்சார் அதிகாரிகள் நிறைய இடங்களில் வசனங்களையும் அரசியல் கருத்துகளையும் நீக்கச்சொன்னதால் பராசக்தி தயாரிப்பு நிறுவனம் மறுதணிக்கைக் குழுவிற்கு இப்படத்தை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
