இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துவது ஏன்? வைரலாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த புதிய விடியோ குறித்து...

News image

ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த ரீல்ஸ்... - படங்கள்: இன்ஸ்டா / ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Updated On :25 டிசம்பர் 2025, 3:57 pm IST

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த புதிய ரீல்ஸ் விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துவது ஏன் என்ற அந்த ரீல்ஸில் அவரது நடிப்புத் திறமையும் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழில் இவன் தந்திரன் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமானார். விக்ரம் வேதா படத்தில் மிகவும் கவனிக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடைசியாக ஆர்யன் படத்தில் நடித்திருந்தார். விரைவில் இவரது ப்ரோ கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் வைரலான ஒரு ரீல்ஸுக்கு தனது பாணியில் நடித்து விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோ பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த ரீல்ஸ் விடியோவினை முதன்முதலில் உருவாக்கியவர் நுன்னா ரமேஷ். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் 9.6 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.

இவர் 13 வாரங்களுக்கு முன்பாக, எனக்கு ஏன் இன்ஸ்டாகிராம் பிடிக்கிறது என ஆக்ரோஷமாகப் பேசும் விடியோவை சினிமா பாணியில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டிருந்தார்.

இந்த விடியோவிற்கு இன்ஸ்டாகிராம் நிர்வாகமே கமெண்ட் செய்திருந்தது.

9 மில்லியன் (90 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ள இந்த ரீல்ஸைத்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மறு உருவாக்கம் செய்துள்ளார். இவரது ரீல்ஸ் விடியோவும் 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.