செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஓடிடியில் பாகுபலி சாதனையை முறியடித்த திரைப்படம்!

ஒடிய மொழியின் வெற்றிப்படம் ஓடிடியில் வெளியானது....

News image
Updated On :28 டிசம்பர் 2025, 2:53 pm IST

அதிகம் வசூலித்த ஒடிய திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஒடிய மொழியில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஜெகதீஷ் மிஸ்ரா இயக்கத்தில் பாபூஷண் மொகந்தி, அபாரஜிதா மொகந்தி நடிப்பில், ‘போ பட்டு பூதா - bou buttu bhuta’ (அம்மா, மகன் மற்றும் பூதம்) என்கிற திரைப்படம் வெளியானது.

ஹாரர் பின்னணியில் அமானுஷ்யங்களை உள்ளடக்கிய கதையாக உருவான இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிசாவில் ரூ. 18 கோடி வரை வசூலித்து ஒடிய மொழியில் அதிகம் வசூலித்த திரைப்படமானது.

இதற்கு முன், அங்கு பாகுபலி, ஜவான் ஆகிய படங்கள் ஓரளவு வணிகம் செய்திருந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் போ பட்டு பூதா படத்தைப் பார்த்ததால் மிகப் பெரிய வணிக வெற்றியை அடைந்தது.

Story image

இந்த நிலையில், இப்படம் ஏஏஓ என்எக்ஸ்டி (aao NXT) ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்டு கவனம்பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.