திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ரஜினியை வைத்து முதல் மரியாதை... விருப்பம் தெரிவித்த சுதா கொங்கரா!

ரஜினியை இயக்குவது குறித்து சுதா கொங்கரா....

News image

ரஜினிகாந்த், சுதா கொங்கரா

Updated On :29 டிசம்பர் 2025, 11:43 am IST

நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து காதல் திரைப்படம் ஒன்றை விரும்புவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மொழித் திணிப்பு அரசியலுக்கு எதிரான மாணவர்களின் எழுச்சியாக இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இதில், செழியன் என்கிற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சுதா கொங்கரா, “எனக்கு காதல் கதைகள் மீது அதிகம் விருப்பம் உண்டு. நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து முதல் மரியாதை போன்ற திரைப்படம் ஒன்றை இயக்க ஆசைப்படுகிறேன்.

இது என் நீண்ட நாள் விருப்பம். இதற்கான கதையும் இருக்கிறது. ஆனால், முழுமையான வடிவம் இல்லை. அதேநேரம், களைப்பாகவும் உணர்வதால் நான் விரைவிலேயே சினிமாவிலிருந்து ஓய்வு பெறவும் விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.