லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

வன்முறைக்குத் துணைபோகும் கானா பாடல்கள்?

சர்ச்சைக்குள்ளாகும் சில கானா பாடல்கள் குறித்து....

Published On :

இன்ஸ்டாகிராமில் கானா பாடல்களின் வரிகளை ரீல்ஸ் போட்டு வன்முறையில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது.

திருத்தணியில் வடமாநில இளைஞரை ஆயுதங்களால் வெட்டிய கும்பல் கைதானாலும் சமூகத்தில் பெரிய விவாதத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

எங்கிருந்தோ பிழைப்பதற்காக இங்கு வந்த இளைஞர் ஒருவர் போதை கும்பலால் கடுமையாக வெட்டப்பட்டது பலருக்கும் கொந்தளிப்பைக் கொடுத்திருக்கிறது.

இளவயதிலேயே கூர் ஆயுதங்களைக் கொண்டு பட்டப்பகலில் இந்தக் கொடூரங்களைச் செய்வதற்கான நோக்கங்களில் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மோகமும் காரணமாகவே தெரிகிறது.

பட்டா கத்தி, அருவாள்களைச் சிலம்பம் சுற்றுவது போல் சுற்றிக்காட்டி இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை போடும் போக்கும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரீல்ஸ்களில் இடம்பெறும் பாடல்களில் பெரும்பாலும் வன்முறை வரிகள் கொண்ட கானா பாடல்களாக இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

சென்னையின் அடையாளமாக இருக்கும் கானா பாடல்களின் மூலம் பல நல்ல கலைஞர்கள் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களால் அந்த இசையையும் பாடல் தொனியையும் சினிமா மூலம் தனித்துவமான அடையாளங்களையும் பெற்றுள்ளன.

ஆனால், கஞ்சா போதை, பட்டாகத்தி பயன்பாடுகளை ஊக்குவிக்கும் விதமான கானா பாடல்களும் அண்மை காலமாக அதிகரித்திருப்பது அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் அதே வடமாநில இளைஞர் முன், குறிப்பிட்ட கானா பாடல் ஒன்றின் வரிகளுக்கு கத்தியைச் சுழற்றி மரண பயத்தைக் காட்டினர்.

இவர்கள் மட்டுமல்லாது அப்படி நிறைய இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்கள் அடிதடியை ஊக்குவிக்கும் கானா பாடல்களுக்கு இடமளிப்பதைப் பலரும் கண்டிப்பதுடன் இப்படியான பாடல்களைப் பாடுபவர்களை அடையாளம் கண்டு எச்சரிக்க வேண்டுமென்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.