முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

சிறப்பு திரையிடல்களில் பாராட்டுகளைப் பெறும் காதல் என்பது பொதுவுடமை!

காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது...

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 3:30 pm IST

காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் சிறப்பு திரையிடல்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் சமூகம் எப்படி கையாள்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான இது காதலர் தினத்தன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகிணி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.

தற்போது, சினிமா பிரபலங்கள், விமர்சகர்களுக்கான சிறப்பு திரையிடல்களில் காதல் என்பது பொதுவுடமை பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

முக்கியமாக, படத்தின் இறுதி 30 நிமிடங்கள் பல விஷயங்களை யோசிக்க வைப்பதாகவும் தன்பால் உணர்வாளர்களின் உணர்ச்சிகள் ஆத்மார்த்தமாக பேசப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.