நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் நிறைவு!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் நிறைவு தொடர்பாக...

News image
Updated On :16 பிப்ரவரி 2025, 9:21 am

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் 228 எபிசோடுகளுடன் நேற்று(பிப். 15) நிறைவடைந்தது.

கூட்டுக் குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இத்தொடரை பாரதி கண்ணம்மா, ராஜா ராணி தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்கினார்.

இந்தத் தொடரில் ஈரமான ரோஜாவே தொடர் பிரபலம் திரவியம் ராஜ்குமார், நடிகை ஸ்ரீதா சிவதாஸ், அவினாஷ், ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்தனர்.

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டு 228 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில், நிறைவடையந்தது இத்தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றாக ஒளிபரப்பான தொடரை முடித்துவிட்டதாகவும், இதுபோன்ற குடும்பத்தொடர்கள் ஒளிபரப்பாவது மிகவும் அரிது எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.