நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

’முதுகுல குத்திட்டீங்களே..’ புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி வெளியீட்டில் மாற்றம்...

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:47 am IST

விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனையொட்டி, படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், புத்தாண்டை முன்னிட்டு இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதனால், சமூக வலைதங்களில் லைகா நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். முக்கியமாக, விடாமுயற்சி படத்தால்தான் குட் பேட் அக்லி பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியது என்பதால் அதையும் காரணமாகச் சொல்லி தகாத வார்த்தைகளால் விமர்ச்சித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையைவிட விடாமுயற்சிக்குக் காத்திருந்த எங்களை, ‘இப்படி முதுகுல குத்திட்டீங்களே’ என தங்களின் வருத்தங்களையும் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.