கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஷங்கர் இப்படி பேசியிருக்கக் கூடாது: அனுராக் காஷ்யப்

இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் குறித்து பேசியது வருத்தம் அளிப்பதாக அனுராக் கருத்து...

News image
இயக்குநர்கள் ஷங்கர், அனுராக் காஷ்யப்.
Updated On :2 ஜனவரி 2025, 9:01 am

DIN

இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தம் தருவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் அரசியல் பின்னணியைக் கதையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

தமன் இசையமைத்த பாடல்கள் கவனம் பெற்றுள்ளதாலும் படத்தின் டீசர் கொடுத்த ஆவலிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்படி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், “கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலத்தான் எடுத்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு இன்ஸ்டா கொடுக்கும் சுவாரஸ்யத்துக்கு இணையாக கேம் சேஞ்சர் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அனுராக், “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் இப்படி பேசுவது வருத்தத்தைத் தருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்போல படத்தை எடுத்திருக்கிறேன் என்றால் ரசிகர்களின் தேவைக்காக இயக்குநர் தன்னை மாற்றிக்கொண்டதாகிவிடும். நல்ல உணவை பரிமாறுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அற்புதமாக சமைத்துக் கொடுப்பது. இரண்டு, பரிமாறுபவராக இருந்து கேட்கும் உணவை பரிமாறுவது. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.