மோஹித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியானது.
அறிமுக நாயகன் அஹான் பாண்டே, நாயகியாக அனீத் பட்டா நடித்துள்ளார்கள்.
கொரியன் திரைப்படமான எ மொமண்ட் டூ ரிமம்பர் என்ற படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொமாண்டிக் -மியூசிகல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடக்கத்தில் 800 திரைகளில் வெளியான இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் 2,000 திரைகளாக அதிகரித்தது.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுக நாயகன் ஒருவர் திரைப்படம் இவ்வளவு வசூலித்து அசத்துவது பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு நல்ல படம் கிடைத்ததால் அதிகமான வரவேற்பை அளித்து வருகிறார்கள்.
Summary
The film Saiyaara, directed by Mohit Suri, has collected more than Rs. 400 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









