நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், ஆர்யாவின் 36-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.
எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 5 மணிக்கு டீசருடன் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: வாடிவாசல் கைவிடப்படுகிறதா? தயாரிப்பாளர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.