
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் பகிர்ந்துள்ளது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியடைந்தன.
இதனைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வதுபோன்ற விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தற்போது, ஆசீர்வாத் சினிமாஸ் விடியோ ஒன்றை வெளியிட்டு அக்டோபரில் ரிலீஸ் எனக் குறிப்பிட்டுள்ளது.
அந்த விடியோவில், “கடந்த காலங்கள் அமைதியாக இருப்பதில்லை. அக்.2025 - கேமிரா ஜியார்ஜ் குட்டி பக்கம் திரும்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.