கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனசெல்லாம் தொடரில் இருந்து விலகிய நாயகன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் இருந்து நடிகர் ஜெய்பாலா விலகியுள்ளார்.

News image

மனசெல்லாம் தொடரில்...

Updated On :19 மே 2025, 10:16 am

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் இருந்து நடிகர் ஜெய்பாலா விலகியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றான மனசெல்லாம் தொடரில் இருந்து ஜெய்பாலா விலகவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நடிகர் ஜெய்பாலாவே சமூக வலைதளத்தில் இது குறித்து அறிவித்துள்ளார்.

6 மாதங்களாக பழகிய நண்பர்களை விட்டுப் பிரிவது அத்தனை சுலபமல்ல எனக் குறிப்பிட்டு மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''இது கடினமான சூழல், மறக்க முடியாத 102 எபிஸோடுகள், கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஒன்றாக இருந்துவிட்டு தற்போது பிரிவது சுலபமல்ல. என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது அடி மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தின் ஒவ்வொரு தருணங்களும், பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு காட்சிகளும், அதனை படமாக்குவதற்குள் நடக்கும் சிரிப்பலைகளும் என அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை.

எனது இரண்டாவது வீடாக மாறிவிட்ட மனசெல்லாம் தொடரின் தளத்தை விட்டுப் பிரிவதும் குட் பை எனக் கூறுவதும் எளிதல்ல. ஆனால், வாழ்க்கை நகர்ந்துதான் ஆக வேண்டும். எனது இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் என்னை நம்பிய அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அருள் என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

நாயகி பரமேஸ்வரி உடன் ஜெய் பாலா

நாயகி பரமேஸ்வரி உடன் ஜெய் பாலா

எனது மதிப்புமிக்க ரசிகர்கள் மற்றும் அருள் பாத்திரத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொண்டாடிய என் உடன் பிறவா சகோதர, சகோதரிகள் - அனைவருக்கும் நன்றிகள்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மனசெல்லாம் தொடர் 102 எபிஸோடுகளைத் தாண்டி, தற்போது விறுவிறுப்படைந்துள்ளதால், ஜெய்பாலாவுக்குப் பிறகு இந்த பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.