தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

பாராட்டுகளைப் பெறும் பிரணவ் மோகன்லால் படம்!

பாராட்டுகளைப் பெறும் டைஸ் ஐரே...

News image

பிரணவ் மோகன்லால்

Updated On :1 நவம்பர் 2025, 7:59 pm IST

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான டைஸ் ஐரே ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டிருந்தனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில், டைஸ் ஐரே ஹாலோவீன் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் மலையாள ஹாரர் சினிமாவில் முக்கியமான படம் என்றதுடன் கடைசி 30 நிமிடத்தையும் பாராட்டி வருகின்றனர்.

ஹாரர் படங்களை மட்டுமே இயக்கி வரும் ராகுல் சதாசிவன் இந்தியளவில் கவனிக்கப்பட வேண்டிய ஹாரர் இயக்குநர் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

மேலும், இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பதிவு செய்யும் என்றே தெரிகிறது.

Summary

pranav mohanlal's dies irae get good response from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.