கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

மீனவ சமூகத்தில் இருந்து வந்த சுபிக்‌ஷாவை குறித்தும் அவரின் சமூகம் குறித்தும் கமருதீன் பேசியது குறித்து...

News image

கமுருதீன்

படம் - எக்ஸ்

Updated On :3 நவம்பர் 2025, 12:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மீனவ சமூகத்தில் இருந்து வந்த சுபிக்‌ஷாவை குறித்தும் அவரின் சமூகம் குறித்தும் பேசியது நான்தான் என கமருதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

சுபிக்‌ஷாவின் சமூகம் குறித்து பார்வதி பேசியதாக வைல்ட் கார்டு மூலம் நுழைந்தவர்கள் கூறிய நிலையில், அதனை மறுத்து அவ்வாறு பேசியது தான்தான் என கமருதீன் ஒப்புக்கொண்டது பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.

முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.

தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 4 வாரங்களைக் கடந்துள்ளது. 5வது வாரத் தொடக்கத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

இவர்களின் முதல் நாளான இன்று கமருதீன் உடன் திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா ஆகியோர் உரையாடுகின்றனர். அப்போது சுபிக்‌ஷாவின் சமூகம் குறித்து பார்வதி பேசியது சர்ச்சையானது எனக் குறிப்பிட்டனர்.

ஆனால், அதனை மறுத்த கமருதீன், சுபிக்‌ஷா குறித்தும் அவரின் சமூகம் குறித்தும் பார்வதி பேசவில்லை, தான்தான் பேசியதாகக் குறிப்பிட்டார். மீனவ சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதால் பலரின் இரக்கத்தைப் பெற சுபிக்‌ஷா முயற்சிப்பதாகவும், ஆனால் போட்டியின்போது மற்றவர்களை சூழ்ச்சி செய்து ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுபிக்‌ஷா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுபிக்‌ஷா

மீனவ சமூதாயத்தில் இருந்து இவ்வளவு பெரிய மேடையை எட்டிப்பிடித்துள்ளது பாராட்டத்தக்கதுதான், ஆனால், அதற்காக என்ன செய்தாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என கமருதீன் பேசியிருந்தார்.

இதனை வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பார்வதி பேசியதாகக் கூறியும், கமருதீன் அதனை மறுத்து உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கமருதீனின் நேர்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Summary

Bigg boss 9 tamil kamurudin about subiksha goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.