அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிக் பாஸில் போட்டியாளர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டது பற்றி...

News image

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள் - Photo credit: Vijay TV

Updated On :4 நவம்பர் 2025, 12:09 pm IST

பிக் பாஸில் போட்டியாளர்கள் ஒருவரைக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நான்கு வாரங்களைக் கடந்துள்ளது. இதுவரை 5 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரஜன், சாண்ட்ரா, திவ்யா, அமித் பார்கவ் ஆகிய 4 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக இந்த வாரம் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களாகவே பழைய போட்டியாளர்களுக்கும், வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கம்ருதீனும், பிரவீனும் ஒருவரைக்கொருவர் மாறிமாறி தாக்கிக் கொள்கிறார்கள். சக போட்டியாளர்கள் அனைவரும் இருவரையும் தடுக்க முயற்சிக்கிறார்கள். திடீரென கம்ருதீனுக்கும் பிரஜனுக்கும் மோதல் ஏற்படுகிறது.

பிரஜனின் மனைவி சாண்ட்ரா, “நீ ஏன் இப்படி செய்கிறாய்” என்று அழும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

இதுவரை பிக் பாஸ் சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் கெட்ட வார்த்தைகள், மோதல்கள் என தொடர்ந்து நடைபெற்று வருவதாக போட்டியாளர்களுக்கு ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குழந்தைகள் பார்க்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து ஏற்கெனவே இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது வன்முறையைக் காட்சிகள் அரங்கேறியுள்ளது.

பிக் பாஸ் வீடா? அல்லது குத்துச் சண்டை மேடையா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. உடனடியாக மோதலில் ஈடுபட்ட போட்டியாளர்களுக்கு பாரபட்சமின்றி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Summary

Bigg Boss contestants attacked each other hard

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.