ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பிக் பாஸ்: பார்வதியைத் தள்ளிவிட்ட சபரி! கண்ணில் பலத்த காயம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி காயமடைந்திருப்பது பற்றி...

News image

பார்வதிக்கு காயம் - Photo Credit: Vijay TV

Updated On :10 நவம்பர் 2025, 12:59 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதியின் இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு நிகழ்வில் துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டிக்கு பார்வதி, சபரி மற்றும் திவ்யா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்கில் சபரி மற்றும் பார்வதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதும், பார்வதியை சபரி தள்ளிவிடும் காட்சிகளும் இன்றைய முதல் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

சபரி, தள்ளிவிடுகிறார், ஷூ கால்களால் மிதிக்கிறார் என்று பார்வதி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது ப்ரோமோவில் பார்வதியின் இடது கண்ணில் பலமாக அடிபட்டிருப்பது தெரிகிறது. மேலும், கேப்டன் டாஸ்க்கில் குரூப்பாக சேர்ந்து சிலர் செயல்பட்டதாகவும், தனக்காக யாரும் பேச முன்வரவில்லை என்றும் பார்வதி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், கேப்டன் டாஸ்க்கின் போதுதான் கண்ணில் காயம் ஏற்பட்டதா? என்பது ப்ரோமோவில் தெளிவாக இடம்பெறவில்லை.

Summary

Bigg Boss: Sabari pushes Parvathy away! Severe eye injury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.