இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக இயக்கிய ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கியுள்ளார். இது கார்த்திக் சுப்புராஜின் 10-வது படமாக உருவாகவுள்ளது.
இதனை, ஆஸ்கர் விருதுபெற்ற எலிபேண்ட் விஸ்பரஸ் (The Elephant Whisperer) ஆவணப்படம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களைத் தயாரித்த சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியுள்ளது. இதன், தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குழு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அரசன் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.