தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை!

பிரபல பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குறித்து...

News image

பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா - insta/rajkumar rao

Updated On :15 நவம்பர் 2025, 1:09 pm IST

பிரபல பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஹித், பதாய் தோ, மோனிகா ஓ மை டார்லிங், ஸ்திரீ போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் ராஜ்குமார் ராவ்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்குமார் நாயகனாக நடித்து வெளியான சிட்டி லைட்ஸ் எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா என்பவரை அவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர்கள் ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா தம்பதிக்குத் திருமணமாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று (நவ. 15) அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல், வருண் தவான், சோனம் கபூர், க்ருதி சனோன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

It has been reported that famous Bollywood actors Rajkummar Rao and Patralekha have welcomed a baby girl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.