பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் குறித்து நடிகர் பிரவீன்ராஜ் தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்பு பிரவீன்ராஜ் தேவசகாயம் வெளியேற்றப்பட்டார். இவருடன் துஷாரும் வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இவர் வெளியேறும்போது எந்தவித அழுகையும் சோகமும் இல்லாமல் எதார்த்தமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் தகுதி, தராதரம் குறித்துப் பேசியது, பெண்களிடம் நெருக்கமாகப் பழகுவதைப்போல நடந்துகொள்வது என பல்வேறு விமர்சனங்கள் திவாகர் மீது வைக்கப்பட்டது.
இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
திவாகருக்கு இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், பிரவீன்ராஜ் வெளியேறியது தற்போது வரை அதிருப்தியாக இருப்பதாகவும், இது நேர்மையான எவிக்ஷன் இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு - படம் - எக்ஸ்
இந்நிலையில், இந்த அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரவீன்ராஜ் பதில் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு என்னுடைய தன்னப்பிக்கை குறைவாக இருந்ததே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நீடிப்பதற்கு திறமையும், டாஸ்க் சரியாகச் செய்வது மட்டுமே ஒரு அங்கம் என நினைத்திருந்ததாகவும், அதனை விட கருத்துகளை சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!
Summary
Bigg boss 9 tamil praveenraj devasagayam explanation about eviction
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலனுடன் விடியோ வெளியிட்ட நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்!

மருதமலை முருகன் கோயிலில் பிக் பாஸ் நண்பர்கள் சாமி தரிசனம்! புதிய படமா?

வீட்டிலிருந்து வேலை எனும் சிறை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



