திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ராஜமௌலியின் வாரணாசி படத்தில் 6 பாடல்கள்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் பாடல்கள் குறித்து...

News image

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி - (கோப்புப் படம்)

Updated On :21 நவம்பர் 2025, 9:35 pm IST

இயக்குநர் ராஜமௌலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று (நவ. 21) பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் கீரவாணி கூறியதாவது:

“ரசிகர்கள் பிரமாண்டத்தை எதிர்பார்க்கலாம். வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. எனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. நீங்கள் செய்யும் பணியில் தெளிவும் உறுதியும் இருந்தால் உங்களுக்கு அழுத்தமே இருக்காது” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Music composer M.M. Keeravani has announced that there will be a total of 6 songs in director Rajamouli's film 'Varanasi'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.